ச்சீ...பெண்ணைக் கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்யும் அரசு அதிகாரி : வைரல் வீடியோ

செவ்வாய், 4 ஜூன் 2019 (20:59 IST)
பரமக்குடியில் மின்வாரிய அலுவலகத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்யவந்த வந்த பெண் ஊழியரை, அங்கு பணியாற்றும் அரசு அதிகாரி ஒருவர் பகிரங்கமாகக் கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்யும் வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.
பரமக்குடியில் உள்ள சத்திரக்குடியில் ஒரு மின்வாரிய அலுவலகம் இயங்கிவருகிறது. இங்கு அதிகாரியாக பணியாற்றிவருபவர் நாகராஜ்(50). இந்த அலுவலகத்துக்கு தினமும் பெருக்க்கி சுத்தம் செய்ய வரும் ஒரு பெண் ஊழியரின் இடுப்பைப் பிடித்து கட்டி அணைத்து சில்மிஷம் செய்யும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 
இதில் என்னக்கொடுமை என்றால் நாகராஜ் அலுவலகத்துக்கு நேரத்திலேயே வந்துள்ளார். அதனையடுத்து வேறு ஊழியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். பின்னர் நாகராஜ் பெண் ஊழியரை சில்மிஷம் செய்வதை இன்னொரு ஊழியரைப் படம் பிடிக்கச் சொல்கிறார். அந்தப் பெண் கூச்சப்பட்டு விலக நினைத்து, என்னை விடு என்று கூறுகிறார்... ஆனால் இதைக்காதில் வாங்காமல் திரும்பவும் அதேபோல் கட்டிப்பிடிக்கிறார்.
 
தாங்கள் அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல் அதிகாரிகள், இதுபோல் வக்கிரப் புத்தியுடன் நடந்துகொண்டதுதான் எல்லோருக்கும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்