பால் விலை உயர்வை அடுத்து பேருந்து கட்டணம் உயருமா ? அமைச்சர் முக்கிய தகவல்

திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (18:06 IST)
தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு பால் விற்பனையாளர்கள், பால் கொள்முதல் செய்பவர்கள் மற்றும் ஆளுங்கட்சியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மக்களும் எதிர்கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்  ஆவின் பால் விலை ரூ. 6 விலை உயர்த்தப்பட்ட போதிலும் கூட டீ. காபி விலை உயர்த்தப்போவதில்லை என சென்னை பெருநகர கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில்  திருச்சியில் நடைபெற்ற மோட்டார் ஆய்வாளர்களுக்கு வாகன தணிக்கை பணிக்காக தமிழக போக்குவரத்துறை சார்பில் இ சலான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். சலான் கருவிகளை வழங்கினார்.அப்பொது பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர்  தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்