குடிபோதையில் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி!

புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:49 IST)
குடிபோதையில்  தகராறு செய்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவியால் மயிலாடுதுறை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மயிலாடுதுறையை சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்
 
இந்த நிலையில் குமார் தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒருகட்டத்தில் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்ற ரம்யாவை அவருடைய தாய் வீட்டிற்கு வந்து குடிபோதையில் தகராறு செய்துள்ளார்
 
இதனால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளால் தனது கணவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து ரம்யாவை கைது செய்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்