இந்த மூவரில் ஒருவர் தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியா?

திங்கள், 28 ஜூன் 2021 (19:50 IST)
தமிழகத்தின் டிஜிபி திரிபாதி அவர்கள் நாளை மறுநாள் அதாவது ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்பது குறித்த கேள்வி எழுந்தது 
 
தமிழகத்தின் டிஜிபியை தேர்வு செய்ய இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்பட முக்கிய அதிகாரிகள் நேற்று டெல்லி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி பதவி சைலேந்திரபாபு, சஞ்சய் அரோரா மற்றும் கரன் சின்ஹா ஆகிய மூன்று பேரின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்காக மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவர் இந்த மூன்று பேரில் ஒருவர் ஆகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்