சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படமாட்டோம். தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம்.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தமிழக பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தைப் பொறுத்தே தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்போம் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.