பரபரப்பான சூழ்நிலையில் தினகரனை சந்தித்த விஷால்.....

புதன், 23 ஆகஸ்ட் 2017 (17:06 IST)
தமிழக அரசியல் பரபரப்பாக உள்ள சூழ்நிலையில் நடிகர் விஷால் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணி இரண்டும் சமீபத்தில் ஒன்றாக இணைந்தனர். அதே சமயம், தினகரன் மற்றும் சசிகலாவை ஒதுக்கிவிட்டு அவர்கள் செயல்பட்டு வருவது தினகரன் தரப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாண்டிச்சேரியில் உள்ள உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், நடிகர் விஷால் இன்று காலை தினகரன் வீட்டிற்கு வந்தார். அவரின் தங்கை கிருத்திகாவின் திருமணம் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான திருமண பத்திரிக்கையை விஷால் தினகரனிடம் கொடுத்தார். சமீபத்தில் வைகோவிற்கும் விஷால் பத்திரிக்கை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்