விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

சனி, 18 பிப்ரவரி 2023 (14:14 IST)
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
விழுப்புரம் அருகே இயங்கி வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரித்து வருவதாகவும் அவர்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட முறைகேடுகள் நடந்து வருவதாகவும் புகார் எழுந்தது. 
 
மேலும் திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென காணவில்லை என அவரது மகன் கொடுத்த புகார் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சமீபத்தில் அன்புஜோதி ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டு எட்டு பேர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜேபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்