உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் "அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளரட்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"நோன்பிருந்து, உறவுகளுடன் நட்பு, நெஞ்சங்களுடன் அன்பை பரிமாறி, ஈகை திருநாளாம் ரம்ஜான் திருநாளை கொண்டாடும் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்து மகிழ்கிறேன்."