மாணவர்களை வாழ்த்திய விஜய், “படிப்பில் சிறப்பு பெற்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டு. கல்வி என்பது வெற்றி நோக்காக மட்டுமல்ல, வாழ்க்கையின் பல்வேறு சவால்களை சந்திக்க உதவும் ஆற்றல். ஒரே தேர்வில் வெல்ல வேண்டும் என்ற மன அழுத்தத்தில் மாணவர்கள் இறுக்கம் கொள்கிறார்கள். நீட் மட்டுமே உலகம் அல்ல; அதைவிட விரிவான வாய்ப்புகள் இவ்வுலகில் இருக்கின்றன,” என கூறினார்.
அதே நேரத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவில் பணம் செலவிடப்படும் என்றும், தேர்தல் நேரத்தில் ஊழலை ஊக்குவிக்காமல் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "வண்டி வண்டியாக பணத்தை இறைக்கும் நோக்கம் மக்களை விலைக்கு வாங்குவதே. அது திருடப்பட்ட அரசுப் பணம். நல்லோர், நேர்மையாளர், மக்களுக்காக பணியாற்றுவோர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்," என்றார்.