மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்ட வீடியோ ! ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர் !

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (19:05 IST)
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்ட வீடியோ ! ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்
சமீப காலமாகவே ரயிலில் பயணம் செய்கின்ற இளைஞர்கள் சாகசம் என்ற பெயரில் ரயில் படிக்கட்டுகளில் தொங்குவதும், கம்பியை பிடித்து தலையை வெளியே காட்டுவதுமாக செய்து வருகின்றனர். இதன் விபரீதத்தை உணராமல் இப்படிச் செய்வதால், பலர் உயிரிழக்கும் சூழ்நிலையும், விபத்துகளும் நேர்கின்றன.
 
இந்நிலையில் மத்திய ரயில்வே மற்றும் வணிக தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது :
 
ஓடும்  ரயிலில் வித்தை காண்பிப்பதாகவும், துணிச்சலின் அடையாளமகவும் செய்கின்ற செயல்  துணிச்சல் கிடையாது. உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது, அதை ஆபத்தில் வைக்க வேண்டாம்.
 
ரயில் விதிகளைப் பின்பற்றுங்கள், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்