வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. என்ன காரணம்?

சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:22 IST)
வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் திடீர் என நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பயணிகள் பெறும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  
 
ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து  ஆந்திராவின் ஒரு சில பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இதனை அடுத்து அவர்கள்  ரயிலில் செல்ல தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  திடீரென பேருந்துகள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பலர் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்