எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

வெள்ளி, 23 ஜூன் 2023 (17:05 IST)
தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என வைகோ தலைமையிலான மதிமுக ஒரு கோடி கையெழுத்து பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது என பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அரசியலில் அமைப்பு சட்டப்படி ஆளுநரை யாராலும் மாற்ற முடியாது என்றும் ஆளுநரை திரும்ப பெற மதிமுக எத்தனை கோடிகள் வாங்கினாலும் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் ’அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அவர்கள் மக்களை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்