கருணாநிதியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

செவ்வாய், 26 மே 2015 (00:52 IST)
திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் என சந்தித்த நிகழ்வு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
திமுக தலைவர் கருணாநிதியை, அவரது இல்லமான சென்னை, கோபாலபுரத்தில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்தார்.
 
திமுக தலைவர் கருணாநிதியின், உடன் பிறந்த அக்கா சண்முக சுந்தரம்மாள், உடல் நலக்குறைவினால் சமீபத்தில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செல்லவில்லை. 
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது, சண்முக சுந்தரம்மாள் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தது குறித்து  விசாரித்தார். மேலும், அவர் கருணாநிதிக்கு ஆறுதல் கூறினார். 
 
சமீபத்தில், தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட விழாவுக்கு சென்ற, பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போது திடீரென, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்