டிரம்ப் கதி தான் ஓபிஎஸ்க்கும் ஏற்படும்: உதயநிதி ஸ்டாலின்

திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:23 IST)
மோடியால் கை உயர்த்தப்பட்ட ட்ரம்புக்கு ஏற்பட்ட கதிதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஏற்படும்  என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் இந்தியா வருகை தந்தபோது மோடியுடன் கையை தூக்கி உயர்த்தி காட்டினார். இதனை அடுத்து சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் தனது பதவியை இழந்தார் 
 
10 நிமிடம் பிரதமரிடம் தனியே பேசிய முதல்வர்: என்ன பேசினார்கள்?
இந்த நிலையில் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் இபிஎஸ் கைகளை உயர்த்தி காட்டினார். இது குறித்து கருத்து கூறிய திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்க்கு ஏற்பட்ட கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ் இபிஎஸ்க்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்
 
மேலும் திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்