முகமது ஆரிப் அஹமது என்ற நபர், இந்திய எல்லைக்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் நுழைய முயன்றபோது, பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டார். அவரிடம் சோதனை செய்தபோது, எந்தவிதமான ஆயுதங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லை என்றும், ஆனால் பாகிஸ்தான் கரன்சி 20 ஆயிரம் ரூபாய் இருந்தது ஆகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், அவர் உள்நோக்கத்துடன் எல்லை தாண்டினாரா அல்லது தவறுதலாக எல்லை தாண்டினாரா, அல்லது உளவு பார்க்க வந்தாரா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அவரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில், எந்த ஒரு பயங்கரவாத குழுவுடனும் நேரடியாக தொடர்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், ஒருவேளை அவர் ஒற்றராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது கைது குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலும் இதுவரை வரவில்லை என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.