ஜெயலலிதா மரணத்தில் திமுக மாட்டிக்கொள்ளும்: டிடிவி தினகரன்

திங்கள், 7 நவம்பர் 2022 (09:52 IST)
ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் அந்த கட்டி மாட்டி கொள்ளும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திமுக வரம்புமீறி ஆட்சி செயல்படும்போது மூக்கணாங்கயிறு போல செயல்படுவதற்கு ஆளுநர் கண்டிப்பாக தேவைதான் என்றும் அவர் ஆளுநர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
 
மேலும் ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் திமுக தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை வெளியான நிலையில் அதில் பரபரப்பு தகவல்கள் இருந்ததையடுத்து டிடிவி தினகரன் இந்த கருத்தை கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்