லாரி மோதி விபத்து; மகள் கண் முன் தந்தை பலி!

திங்கள், 9 மே 2022 (18:56 IST)
திருவாரூர் பள்ளிராமங்கலத்தில் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பள்ளிவராக மங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமணி(60). இவர் அங்குள்ள ஜவுளிக் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சவுமியாவும் அதே ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறார்.

இன்று காலையில் வீரமணி மற்றும் அவரது மகள் இருவரும் தனித்தனியாக சைக்கிளில்பணிக்குச் சென்றனர்.

அப்போது, கேக்கரை என்ற இடத்தில் எதிரே வந்த மணல் லாரி மோதியதில் வீரமணி சைக்கிள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வீரமணி பலியானார். இதைப் பார்த்த மக்கள் சுமார் 1 கிமீ தூரம் விரட்டிச் சென்று மணல் லாரியைப் பிடித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்