திருச்சி-கோலாலம்பூர் தினசரி விமானம்: இண்டிகோ அறிவிப்பு!

புதன், 13 ஏப்ரல் 2022 (17:44 IST)
திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15ஆம் தேதி முதல் திருச்சி கோலாலம்பூர் விமான சேவை தொடங்கும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
 இதனால் திருச்சி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்