நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு: தயாராகும் விண்ணப்பதாரர்கள்!

வெள்ளி, 20 மே 2022 (09:10 IST)
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர் 
 
நாளை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2ஏ பிரிவுகளை எழுத உள்ளவர்கள் 8:30 தேர்வு மையத்திற்கு வர வேண்டுமென்றும் 8.59 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகம் முழுவதும் 4012 தேர்வு மையங்களில் நாளை காலை ஒன்பது முப்பது மணி முதல் 12 30 மணி வரை தேர்வு நடைபெறும் 
 
ஆனால் 8:30 மணிக்கு தேர்வுகள் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது 
 
இந்த தேர்வை 6.72 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.8 லட்சம் பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்