நாளை தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் – அமைச்சர் அறிவிப்பு!

வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:20 IST)
நாளை தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் நீர்பிடிப்பு பகுதிகள் நிறைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழந்த நிலையில் இன்று 200 வார்டுகளிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 5000 பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதில் 750 முகாம்கள் சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்