கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாலராகவும், பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் அதிகப்படியான ரசிகர்கள் மைதானத்திற்கு வரவில்லை என்றும், எறக்குறைய அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியானது. ஆனால், நட்சத்திர கிரிக்கெட் வெற்றி பெற்றதாக நடிகர் சங்கம் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சங்க உறுப்பினரான நடிகர் வாராகி, நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறும்போது “ நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை. முந்தைய நிர்வாகத்தை விட இருமடங்கு ஊழல் அதிகரித்துள்ளது. நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரூ.3 கோடி ஊழல் நடந்துள்ளது. போட்டியை ஒளிபரப்பிய சன் டிவி ரூ.13 கோடி கொடுத்ததாக கூறினார்கள். தற்போது 7 கோடிதான் தந்ததாக பொய்க்கணக்கு எழுதியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.