ஜெயலலிதாவை உதைத்தவர்கள் திமுகவினர் - தமிழிசை

செவ்வாய், 26 மார்ச் 2019 (18:31 IST)
கொலையுதிர்காலம் என்ற படத்தின் சந்திப்பின் போது நயன்  தாரா குறித்து ராதாரவி சர்சைக்குரிய விதத்தில் பேசினார்.  நயந்தாராவை சர்ச்சைக்குரிய மூறையில் விமர்சித்தற்காக நடிகர் ராதாரவிக்கு பலரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது :
 
முன்னர் சட்டசபையில் ஜெயலலிதாவை அடித்து உதைத்தவர்கள்தான் இந்த திமுகவினர். திமுகவினர் பேசிய பேச்சை அச்சிலும் ஏற்ற இயலாது. அதேபோல் தற்போது ராதாரவி பேசியுள்ளார். கட்சியின்  ராதாரவியை தற்காலிகமாக நீக்கிவிட்டதாக திமுக தேர்தல் நாடகம் நடத்துகின்றது என  தமிழிசை தெரிவித்துள்ளார். 
 
இந்த விவகாரம் குறித்து ராதாரவி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்