தமிழ்நாட்டில் ஒரே மிகப்பெரிய கட்சி இதுதான் - சீமான்

சனி, 30 ஜனவரி 2021 (21:47 IST)
தமிழ் நாட்டில் மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமீபத்தில் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திராவிடக் கட்சிகளுக்கு முன்னால் தன் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிவித்ததுடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறித் திமுக, அதிமுக  திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய சீமான், நான் ஓட்டுக்கானவன் அல்ல, நான் நாட்டுக்கானவன் மக்களுக்கானவன்..நாங்கள் வீதிக்கு வந்து வாக்கு கேட்பது எதிர்க்காலச் சந்திததியினருக்காகத்தான்..எதிர்க்காலத்தில் தமிழகத்தில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்