இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

Prasanth Karthick

வியாழன், 16 மே 2024 (19:06 IST)
கடந்த வாரம் முதலாகவே தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 14 மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த வாரம் முதலாகவே நல்ல மழை பெய்துள்ளது. கோடை மழையால் வெயிலின் சூடு தணிந்துள்ளது என்றாலும், சில பகுதிகளில் அபரிமிதமான மழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இரவு நேரத்தில் மேலும் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, தேனி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்