தர்ணாவின் ஈடுபட முயன்ற MYV3 ADS நிறுவன உரிமையாளர் கைது

Sinoj

சனி, 10 பிப்ரவரி 2024 (16:09 IST)
மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி பல ஆயிரக்கணகான மக்களை இதில் இணைந்து, பணமோசடி செய்ததாக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி கோயம்புத்தூர், நீலாம்பூர் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம்பேரை வலுக்கட்டாயமாக வாட்ஸ் ஆப் மூலம்  திரட்டிய நிலையில்,  இந்தக் கூட்டம் கூடியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டதாக 5ஆயிரம் பேர் மீது பொது இடங்களில் தொல்லை கொடுத்தல், உட்பட 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த   நிலையில், MYV3 ஆட்ஸ் நிறுவனத்தைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த நிறுவனத்தின் MD சக்தி ஆனந்தன் கோவை கமிஷனர் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்திய  நிலையில், ஆரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தர்ணாவில் ஈடுபட முயன்றதாக MD சக்திஉள்ளிட்ட 70 பேரை போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்