பின்பக்கமாக வாடிக்கையாளர்களை அனுமதித்த ஜவுளிக்கடை… அபராதம் போட்ட மாநகராட்சி!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:58 IST)
வேலூரில் பிரபல தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஊரடங்கை மீறி வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் தடையை மீறி ஒரு ஜவுளிக்கடையில் பின்பக்கமாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று கடையை மூடி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்