வழிபாட்டு தலங்களுக்கான தடைகள் தொடரும்

புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:45 IST)
கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் இந்த முறை பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் வழிபாட்டு தலங்கள் குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறந்த ஒருவாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படுமாம். அதுவரை கோயில்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்