தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:01 IST)
தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டுகளாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 
 
முன்னதாக பள்ளிகள் திறப்பையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது போல கல்லூரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் எனவும் தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்