தமிழக மக்கள் பாமகவுக்கு வாய்ப்பு தருவார்கள்: அன்புமணி நம்பிக்கை

திங்கள், 12 அக்டோபர் 2015 (00:54 IST)
நாட்டில் நல்ல மாற்றம் தேவை விரும்பிய மக்கள் நரேந்திர மோடி, மம்தா பேனர்ஜி, கெஜ்ரிவால் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளித்தது போல தமிழகத்தில் பாமகவை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று பாமகவின் தென் மண்டல அரசியல் மாநாட்டில் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
 

 
பாமகவின் தென் மண்டல அரசியல் மாநாடு நெல்லையில் நடைபெற்றது. இந்த மாநாடு, மாநில துணைப் பொதுச் செயலாளர் இஸ்ரா அலி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாமக தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 
புதியதோர் தமிழகம் செய்வோம் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற மாநாட்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
 
இந்த மாநாட்டில் எழுச்சியுரையாற்றிய மருத்துவர் அன்புமணி, திமுக மற்றும் அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்து ஊழல் இல்லாத மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே தமது கனவு என்றார்.
 
மேலும், மாற்றம் வேண்டும் என விரும்பிய மக்கள் நரேந்திர மோடி மம்தா பேனர்ஜி கெஜ்ரிவால் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளித்தது போல தமிழகத்தில் பாமகவை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்