தமிழக அரசு கோவில்களை திறக்கலாம்... தமிழிசை

திங்கள், 11 அக்டோபர் 2021 (12:01 IST)
தமிழக அரசு கோவில்களை திறக்கும் வி‌ஷயத்தில் முடிவை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என தமிழிசை கருத்து. 
 
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எனினும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாரம் முழுவதும் கோவில்களை திறக்க பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கோவில்கள் எல்லாம் திறந்து தான் உள்ளன. எனவே தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் முடிவை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.  மதுரை தெப்பக்குளம் சென்றால் மாரியம்மனை வழிபடாமல் சென்றது இல்லை. ஆனால் இன்றைக்கு மதுரை வந்தும், தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்