உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? கேள்விக்கு தமிழிசையின் ரியாக்சன்..!

Siva

வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:43 IST)
அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா என்ற கேள்விக்கு புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கை எடுத்து கும்பிட்டு விட்டு பதில் சொல்லாமல்  சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

புதுச்சேரியில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில்  கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதை பேசியபோது புதுச்சேரி வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபடுவோம், அனைத்து நல்லதும் செய்வோம், அனைவரும் இணைந்து பணியாற்றுவோம், புதுச்சேரியை முன்னேற்றுவதில் வளர்ச்சி பொங்கலாக இந்த பொங்கல் இருக்கட்டும் என்று தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது ’அமைச்சராக இருக்கும் உதயநிதி துணை முதல்வராக போகிறாரே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இரு கைகளையும் செய்தியாளர்களை நோக்கி வணங்கி விட்டு புறப்பட்டு சென்று விட்டார். தொடர்ந்து செய்தியாளர்கள் இந்த கேள்வியை கேட்ட போதும் அவர் பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்