இந்த விழாவில் கலந்து கொள்ள 2000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்ட நிலையில், 3000 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஸ் இல்லாத சிலர் இன்னும் நுழைவு வாயிலில் காத்திருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், விழாவை பற்றிய செய்தி சேகரிக்க, செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், வீடியோ மற்றும் புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பவுன்சர் ஒருவர் செய்தியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த செய்தியாளர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் விழா நடைபெறும் அரங்கத்தின் வெளியே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.