புலன் விசாரணையை திசை திருப்புகிறார் அண்ணாமலை: தமிழ்நாடு காவல்துறை

சனி, 29 அக்டோபர் 2022 (19:50 IST)
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை பாஜக தலைவர் அண்ணாமலை திசை திருப்புகிறார் என தமிழ்நாடு காவல்துறைகூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து கூறியபோது, ‘கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே பல கருத்துக்களை கூறி விசாரணையை அண்ணாமலை திசைதிருப்ப முயற்சிக்கிறார் என குறிப்பிட்டுள்ளது. 
 
வதந்திகளை பரப்பி முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி தமிழக காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் தமிழக காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 
 
பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காவல்துறையின் இந்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்