தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, தமிழக மீனவர்களை கைது செய்வதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டு வருகிறார். இருப்பினும், கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இதற்கு பிறகு, சற்றுமுன் மேலும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், இன்று ஒரே நாளில் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, அவர்களின் ஐந்து படகுகளையும் சிறை பிடித்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.