இப்படி சும்மா சும்மா கேஸ் போடக் கூடாது! – கேரளாவை கண்டித்த உச்சநீதிமன்றம்!

புதன், 15 டிசம்பர் 2021 (16:25 IST)
முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது குறித்து மனு அளிக்கும் கேரளா அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நீண்ட காலமாக கேரளா – தமிழகம் இடையே உடன்படாத தன்மை நீடித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு குறித்து கேரளா தொடர்ந்த வழக்கில் அணையை ஆய்வு செய்த குழு அணை பாதுகாப்பானதாக உள்ளதாக சான்று அளித்தது.

எனினும் தொடர்ந்து அணையில் நீர் திறப்பு விவகாரங்கள் குறித்து கேரள அரசு அடிக்கடி உச்சநீதிமன்றத்தை நாடி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவ்வாறாக மனு அளிக்கப்பட்டது குறித்து கண்டித்த உச்சநீதிமன்றம் ”முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனு அளிக்கக்கூடாது. எப்போது தண்ணீரை திறக்க வேண்டும் என்பது கண்காணிப்பு குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது. புகார்கள் தெரிவிப்பதாக இருந்தால் கண்காணிப்பு குழுவிடன் தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்