தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (10:52 IST)
தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அந்தமான் தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியுள்ள நிலையில் இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக தமிழக கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என்றும் 24ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்