தந்தை இருந்தும் அனாதையான குழந்தை… அநியாயமாக பலியான சிறுமி!

புதன், 9 செப்டம்பர் 2020 (16:09 IST)
கள்ளக்குறிச்சி அருகே சிறுமியின் குறும்புத்தணம் பொறுக்காமல் பெரியம்மா அடித்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்விழி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராணிக்கும் அவர் கணவருக்கும் பிரின்ஸி என்ற 5 வயது மகள் இருந்துள்ளார். சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டார். இதனால் சிறுமி தனது பெரியம்மா வளர்ப்பில் இருந்துள்ளார்.

சிறுமியை வளர்த்த பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் சிறுமி செய்யும் குறும்புகள் சேட்டைகளால் அவர் அடிக்கடி கோபமாகி சிறுமியை அடிப்பது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல சிறுமி, சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்க கோபத்தில் அருகில் இருந்த கம்பை எடுத்து அடித்துள்ளார் அந்த பெண். இதில் அழுது அழுது சிறுமிக்கு மூச்சுத்திணறலே வந்துள்ளது. இதனால் மயக்கமடைந்த பிரின்ஸியை மருத்துவமனையில் சேர்க்க செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்