21 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை: 3 படகுகளும் பறிமுதல்..!

வியாழன், 22 ஜூன் 2023 (07:50 IST)
தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகள் உள்பட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு மீனவர் சங்கங்கள் பலமுறை வலியுறுத்தியும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. 
 
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மேம்படுத்ததாக 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்கள் சென்ற மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்