தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

திங்கள், 28 நவம்பர் 2022 (20:50 IST)
தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழத்தைச் சேர்ந்த வீரர்கள், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த  நவம்பர் 14 ஆம் தேதி  இலங்கையின் நெடுந்தீவு அருகில், எல்லை தாண்டி  மீன்பிடித்ததாக் கூறி தமிழத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இன்று இலங்கைக் கடற்படை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது.
 


ALSO READ: 8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
 
இந்த நிலையில், இதே போல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் ஜெகதாபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் மற்றும்  ஐந்து மீன்பிடி விசைப்படலை இலங்கை கடற்படை கைது செய்து, விசாரணைக்காக யாழ்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்