தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

புதன், 16 நவம்பர் 2022 (22:03 IST)
இலங்கையில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழத்தைச் சேர்ந்த வீரர்கள், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்த நிலையில், மீண்டும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  

இலங்கையின் நெடுந்தீவு அருகில், எல்லை தாண்டி  மீன்பிடித்ததாக் கூறி தமிழத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இன்று இலங்கைக் கடற்படை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்