மதுபாட்டிலுக்குள் மண்..வாட்ஸ் ஆப்பில் புகாரளித்த மதுப்பிரியர்!

வியாழன், 7 ஜூலை 2022 (17:36 IST)
விலியனூரில் உள்ள கொம்யூன் என்ற பகுதிக்குட்பட்ட சேதராப்பட்டில்  இயக்கி வரும் டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கினார்.

அந்த மதுபான பாட்டிலில் மண் இருந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனக்கு வேறு பாட்டில் கொடுக்கும்படி டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு செய்தார்.

ஆனால், ஊழியர் வேறு பாட்டில் தர மறுத்துள்ளார்,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபானப் பிரியர் அந்த வீடியோவை கால்துறை இணை ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளார், இதுகுறித்து, கலால்துறை ஊழியர்கள் அந்தக் கடை  ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்