சிக்கலில் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட யூட்யூப் பிரபலங்கள்! – முதல்வரிடம் மனு!

செவ்வாய், 29 ஜூன் 2021 (13:35 IST)
சமீபத்தில் யூட்யூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில யூட்யூப் பிரபலங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக யூட்யூப் உள்ளிட்ட தளங்களில் ஆபாசமாக மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசும் நபர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் பப்ஜி மதன், கிஷோர் கே சுவாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மேலும் சில யூட்யூப் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகார இயக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் யூட்யூப் வீடியோக்களில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, டிக்டாக் திவ்யா உள்ளிட்ட 8 பேரின் யூட்யூப் பக்கங்கள் முடக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபடும்போது இந்த வீடியோக்களை மாணவர்கள் பார்க்க நேரிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்