இலங்கையில் இருந்து அகதிகளாக 6 பேர் இன்று தனுஷ்கோடி வருகை!

புதன், 27 ஜூலை 2022 (07:45 IST)
இலங்கையில் இருந்து அகதிகளாக 6 பேர் இன்று தனுஷ்கோடி வருகை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் இலங்கை மக்கள் கடும் அவதி உள்ளனர் 
 
இந்த நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது 
 
ஏற்கனவே இலங்கையில் இருந்து பல குடும்பத்தினர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ள நிலையில் இன்று மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் சாப்பிடக்கூட வழியில்லை என்று இலங்கையில் இருந்து 6 பேர் தனுஷ்கோடிக்கு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அகதிகளாக வந்தவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் விசாரணை செய்த அதிகாரிகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்