இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

செவ்வாய், 5 ஜூலை 2022 (08:02 IST)
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக பலர் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து இதுவரை 90-க்கும் மேற்பட்ட தமிழகம் வந்துள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இலங்கையில் இருந்து அகதிகள் வர அதிக நபர்கள் வந்து கொண்டிருப்பதால் கடலோரப் படை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்