மதுவில் ஏதோ கலந்து கொடுத்து..அவர்கள் என்னை... - சுசித்ரா பகீர் தகவல்?

சனி, 4 மார்ச் 2017 (12:33 IST)
ஒரு நடிகரும், இசையமைப்பாளரும் மதுவில் ஏதோ கலந்து கொடுத்தனர். அதற்கு பின் நடந்ததை நான் கூற முடியாது என பாடகி சுசித்ரா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.


 

 
கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் தன்னை தாக்கியதாக ட்விட்டரில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் கணவர் அதை மறுத்தார். பின்னர் தனுஷ் தாக்கவில்லை, ஒரு கும்பல் தன்னை தாக்கியது என்றார். இந்நிலையில் தற்போது சின்னத்திரை டிடி, தனுஷ், ஹன்சிகா, அனிருத், ஆண்ட்ரியா ஆகியோரின் நெருக்கமான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
தற்போது, அவரின் டிவிட்டர் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது.  சுசித்ரா தனது டிவிட்களை தன்னை பின் தொடர்பவர்கள் மட்டும் பார்க்கும் படி செய்துள்ளார் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்று காலை அந்த பூட்டு திறக்கப்பட்டு, சூதுகவ்வும் படத்தில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, நண்பன் படத்தில் நடித்த அனாயா  போன்றோரின் அரை நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட பலர் அதிர்ச்சியடைந்தனர்.  அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார்.


 

 
அதில், அவர்கள் ஏதோ ஒன்றை கலந்து கொடுத்தனர். அதன் பின் அவர்கள் இருவரும் என்னுடம் உறவு கொண்டனர். அது கொடுமையான அனுபவம். அதுபற்றி என்னால் இங்கே கூற முடியாது” என அவரின் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அது ஒல்லி பிச்சான் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என கிசுகிசுக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன் டிவிட்டர் கணக்கை தயவு செய்து நிறுத்தி கொள்ளுமாறும், தான் நடிகர், நடிகைகளை பற்றி எப்போதும் பேசியதில்லை என சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்