அரசு பேருந்து ஓடி கொண்டிருந்தபோது சக்கரம் தனியாக கழன்றது.. பயணிகள் அதிர்ச்சி..!

Siva

வியாழன், 1 மே 2025 (07:34 IST)
தமிழ்நாட்டில் அரசு பேருந்து சாலையில் ஓடிக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலம் விருத்தாச்சலம் பணிக்கு சொந்தமான, தடம் எண் 310 என்ற பேருந்து திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்த நிலையில், திடீரென திட்டக்குடியை அடுத்த ‘அரங்கூர்’ என்ற பகுதிக்கு வந்தபோது, பேருந்தின் முன் இடது பக்க சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது.

இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். ஆனால், பேருந்து ஓட்டுனர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

இதனால் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும், மிக மோசமாக பராமரிக்கப்பட்ட பேருந்துகள் உயிரைப் பணயம் வைத்து இயக்கப்படுவதா? என, சமூக அக்கறை கொண்டவர்கள் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்