7 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

புதன், 10 நவம்பர் 2021 (13:48 IST)
இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக 7 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், கோவை, நீலகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை மையம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்