சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஹெலிகாப்டரில் இருந்த உடல்களை மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலியான பைலட் சுமித்ரா விஜயன் ஐதராபாத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்ததுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்து நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றுள்ளது என்றும் தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஐ.ஜி தெரிவித்துள்ளார்