"எனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவது அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் நீக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் விரைவில் நன்மை நடக்கும்."
அதிமுகவில் தற்போது குழப்பமான சூழல் இருந்து வரும் நிலையில், தனது நிதானமே வெற்றிக்கு வழி என்று செங்கோட்டையன் கூறியிருப்பது, அவரது அடுத்த அரசியல் நகர்வுகளுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.