சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையருக்கு, நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் ஒரு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற நபர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு ஸ்டோரி பதிவில், சீமானுக்கு உயிர் அச்சுறுத்தலான வார்த்தைகள் இடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்த ஸ்டோரி பதிவில் சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும் என்பதுடன், நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்காக விரைவில் போட்டி நிலவும் என்ற விதத்தில் மிரட்டல் கூறப்பட்டதாக புகார் கூறுகிறது.